Tuesday, 3 December 2013

மூலநோய் போக்கும் மூலிகை - துத்திக் கீரை

ஆசனவாயின்உட்பகுதியிலுள்ளசிரைகள்வீங்கிப்பருத்துவெளிவருவதைத்தான்மூலநோய்என்கிறார்கள்.

மூலதாரம் சூடு ஏறிமலபந்தமாகும்போது,மலம் வெளியேறாமல்உள்ளுக் குள்ளேயேநின்று இறுக்குகிறது.முக்கி வெளியேற்ற முற்படும்போது மலவாய்க் குடலில் இருந்து சிரைகள்பாதிக்கப்பட்டு வெளியே தள்ளிக்கொண்டு வந்து விடுகின்றன.

தவிரகாய்ந்த மலம் ஆசனவாயைக் கிழிப்பதால் ரத்தம் பீறிட்டு வெளியேவரும்ஒவ்வொரு நாளும் இதே மாதிரி மலம் கழிக்கும்போது அந்த வாய்ப்பிளந்து கொள்ளும்இதை பிஸ்ஸர் அல்லது ஆசனவாய் வெடிப்புஎன்கிறார்கள்.

இது புண்ணாகி நாளடைவில் சீழ் மூலம் அல்லது பவுத்திரமாக மாறும்.இவ்வாறே நவ மூலங்கள் உண்டாகின்றன.

ஆங்கில வைத்தியத்தில் இதை முதல் டிகிரிஇரண்டாவது டிகிரிமூன்றாவதுமற்றும் நான்காவது டிகிரி என நான்கு வகைகளாகப் பிரிப்பார்கள்ஆனால்நமது தமிழ் முன்னோர்கள் இதை இருபத்தோரு வகைகளாகப் பிரித்தார்கள்.

அவை:

நீர் மூலம்செண்டு மூலம்முளை மூலம்சிற்று மூலம்வரண் மூலம்ரத்தமூலம்வினைமூலம்மேக மூலம்பௌத்திர மூலம்கிரந்திமூலம்சூதமூலம்புற மூலம்சீழ் மூலம்ஆழி மூலம்தமரக மூலம்வாத மூலம்பித்தமூலம்சிலேத்தும மூலம்தொந்த மூலம் மற்றும் கவ்வு மூலம்.

இதில் ஒன்பது வகைகள் மிகக் கடுமையானவை என்பதால் இவற்றைநவமூலம் என்றும் சொன்னார்கள்.

நமது மூதாதையரான சித்தர்கள் மூல நோயை குணப்படுத்தும் பல அரியமூலிகைகளை ஓலைச் சுவடிகளில் விட்டுச் சென்றுள்ளார்கள்.

அதனடிப்படையில் மூலநோய்க்கு பிரத்யேகமான மூலிகை மருந்துகள்தயாரிக்கப்பட்டு அளிக்கும்போது பக்க விளைவுகள் இல்லாமல் மூலநோய்குணமாகும்.

ஒரு மண்டலம் சாப்பிடும் மருந்துகளும் உள்ளனஒரே வாரத்தில் குணமாகும்மருந்துகளும் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளன.

இதனால் உள் மூலம் குணமாகும்வெளிமூலம் சுருங்குகிறதுஆசனவாயில்இருக்கும் சீழ்க்கட்டிகள் உடைந்து ஆற்றப்படுகின்றனமல ஜலம் சுலபமானமுறையில் வெளியேறுகிறதுமீண்டும் வருவதில்லை.

உதாரணத்திற்கு ஒரு மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

துத்திக் கீரை என்ற ஒன்றை கேள்விப்பட்டிருப்பீர்கள்இந்த துத்திக் கீரையைதினந்தோறும் சமையலில் சாப்பிட்டு வந்தால் மூலநோய் தலைக் காட்டாது.எத்தகைய மூலக்கட்டிகள் வந்தாலும் துத்தி இலைமீது விளக்கெண்ணெய்தடவிஅனலில் காட்டி மூலக்கட்டியின் மீது வைத்துக் கட்டிவிடகட்டிஉடைந்துவிடும்மூல முனைகள் உள்ளுக்குச் சென்றுவிடும்வேண்டுமானால்நீங்கள் கூட செய்து பார்க்கலாம்.

துத்திக்கீரயின் மற்ற பயன்கள்:


இதன் இலைபூவேர்பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம்கொண்டவை.
மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ் சாலவதக் கிக்கட்டத்தையலே - மேலுமதை எப்படியேனும் புகிச்ச எப்பிணியும் சாந்தமுறும்இப்படியிற் றுத்தி யிலையை (அகத்தியர் குணபாடம்)
மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும்மலச்சிக்கலைநீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம்இன்றைய நவீன உணவுகள்எளிதில் ஜீரணமாவதில்லைமேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும்மலச்சிக்கல் உருவாகின்றதுமனச் சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல்வந்துவிடும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி,அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிதுநெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.

மூல வியாதி குணமாக

காரமும்புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜிஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறதுஇதனால்மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது.

இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசிசிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்புபூண்டுசின்ன வெங்காயம்சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின்சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய்படிப்படியாகக் குணமாகும்.
உடல் சூடு தணிய

துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்கவேண்டும்நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம்பூண்டுமிளகு,தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடுதணியும்.

வெப்பக்கட்டி குணமாக

துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்எண்ணெய் தடவிவதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்துஉடைந்து ஆறும்.

துத்தியிலையை சாறெடுத்துபச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டிகட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.
பல்ஈறு நோய் குணமாக

துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்துஅந்த நீரில் வாய்கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.


குடல் புண் ஆற

துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண்ஆறும்.

சிறுநீர் பெருக்கி

சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது.துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும்சிறுநீரகநோய் வராது.

துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால்நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

No comments:

Post a Comment